தவறான விளம்பரங்களை தடை செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்!!

தவறான விளம்பரங்களை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

தவறான விளம்பரங்களை தடை செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்!!

நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு,  தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள், மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல், தவறான தகவல்களை அளித்தல் போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன.

விதிகளை மீறுவோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தவறு செய்வோருக்கு 50 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையிலும் 3 ஆண்டுகளுக்கு தடை விதிக்கும் வகையிலும் வரையறுக்கப்பட்டுள்ளது.