மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்புத்தொகை... ரூ.75 கோடியை வழங்கியது மத்திய அரசு...

ஜிஎஸ்டி வருவாய் இழப்பீடு தொகையாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு,  75 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்புத்தொகை... ரூ.75 கோடியை வழங்கியது மத்திய அரசு...

கடந்த மே 28ம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதித்தொகுப்பில் போதுமான நிதி இல்லாத காரணத்தால், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு ஒரு லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கடனாக வாங்கி மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக முதற்கட்டமாக 75 ஆயிரம் கோடியை மத்திய அரசு நேற்று வழங்கியுள்ளது.

இது வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் இழப்பீட்டு தொகையுடன் கூடுதலாக வழங்கப்பட்டுள்ள தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய நிதி நடப்பாண்டின் பின்பகுதிகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.