நாளை ஆளுநர்கள் மாநாடு... பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு...

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு நடைபெற உள்ளது.   

நாளை ஆளுநர்கள் மாநாடு... பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு...

மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடைபெற்றது. அதன்பின், கொரோனா பரவலால் கடந்த ஆண்டு இந்த மாநாடு நடைபெறவில்லை.

இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நாளை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.