மீண்டும் முழு ஊரடங்கா..? உச்சநீதிமன்றத்தில் அரசு பதில்...

டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு?

மீண்டும் முழு ஊரடங்கா..? உச்சநீதிமன்றத்தில் அரசு பதில்...

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாக இருப்பதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது குறித்த முன்மொழிவை அம்மாநில அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.

தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு பிறகு காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசம் என்ற நிலையிலேயே நீடித்து வருகிறது. அதன் காரணமாக பள்ளிகளுக்கு ஒரு வார காலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காற்று மாசு காரணமாக டெல்லியில் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த உச்சநீதிமன்றம் கடந்த சனிக்கிழமை டெல்லி அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

இந்நிலையில், இதை ஏற்று ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான தனது முன்மொழியை டெல்லி சுகாதார அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் இன்று சமர்பிக்க உள்ளது.  இதனிடையே டெல்லியில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஒரு வார காலத்துக்கு வீட்டில் இருந்தபடியே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.