முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை... அமலாக்கத்துறை நடவடிக்கை...

கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ரோஷன் பெய்க் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனை... அமலாக்கத்துறை நடவடிக்கை...

கர்நாடகாவில் உள்ள ஐ-நாணய ஆலோசனை மற்றும் அதன் குழு நிறுவனங்கள் நடத்திய கவர்ச்சிகர முதலீட்டுத் திட்டம் மூலம் லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக கடந்தாண்டு புகார் கூறப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது. இதனிடையே கடந்த நவம்பர் மாதம்,  காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் வீட்டில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியதில், முக்கிய ஆவணங்கள் சிக்கியதை அடுத்து அவரை கைது செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கப்பிரிவு போலீசார், இன்று பெங்களூருவில் உள்ள பெய்க் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.