முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்- பலத்த போலீஸ் பாதுகாப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு  கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்- பலத்த போலீஸ் பாதுகாப்பு

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு  கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் வீரராக இருந்து, பாஜகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கவுதம் கம்பீர்.

இவர் அண்மையில் ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பயங்கரவாத அமைப்பிடம் இருந்து தனக்கும், தனது குடும்பத்திற்கும் இமெயில் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அவரது வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிந்து, அதன் உண்மை தன்மையையும், கொலை மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.