ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து...

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து...

பெங்களூருவில் இருந்து குப்பம் வழியாக கொல்கத்தா செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

ஆந்திரா மாநிலம் குப்பம் ரெயில் நிலையம் அருகே சென்ற போது ரெயில் பெட்டி ஒன்றில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதை கவனித்த ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

ரயிலில் இருந்து வெளிவந்த புகையால் அச்சமடைந்த பயணிகள் அனைவரும் இறங்கி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த பிரச்சினையை உடனடியாக சரிசெய்யப்பட்டு, 3 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரெயில் மீண்டும் புறப்பட்டு சென்றது.