ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் கட்டுபாடுகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்...

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் கட்டுபாடுகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்...

 சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன் அனுப்பி இருக்க கூடிய கடிதத்தில், ஒமிக்ரான் டெல்டா வகையை விட 3 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும்  எனவே உள்ளூர் மட்டத்திலேயே கொரோனா பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். குறிப்பாக திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள குறைந்த அளவிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து தங்களுடைய மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும் மத்திய அரசு  உத்தரவிட்டுள்ளது.