மத்திய அமைச்சர்களின் பெயர்களில் போலி தடுப்பூசி சான்றிதழ்... விசாரணைக்கு உத்தரவு..

உத்திர பிரதேசத்தில் மத்திய அமைச்சர்களின் பெயர்களில் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களின் பெயர்களில் போலி தடுப்பூசி சான்றிதழ்... விசாரணைக்கு உத்தரவு..

உத்திர பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்துவதில் குளறுபடிகள் நடைபெறுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. இறந்தவர்களின் பெயர்களில் தடுப்பூசி சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள எட்டாவா மாவட்டத்தில் உள்ள சுகாதர மையம் ஒன்றில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஸ் கோயல், நிதின் கட்கரி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோரின் பெயர்களின் போலி தடுப்பூசி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.