அனைவரும் இந்தியாவில் முதலீடுகளை செய்ய முன் வரவேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு...

வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குவதுடன் அதிகபட்ச வளர்ச்சியையும் அளிப்பதால், அனைவரும் இந்தியாவில் முதலீடுகளை செய்ய முன் வரவேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைவரும் இந்தியாவில் முதலீடுகளை செய்ய முன் வரவேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு...

துபாயில் தொடங்கப்பட்ட எக்ஸ்போ-2020 என்ற மாபெரும் வர்த்தக கண்காட்சியில், இந்திய அரங்கம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு கூடியிருந்தவர்களின் மத்தியில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பேசிய பிரதமர் மோடி, வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குவதுடன் அதிகபட்ச வளர்ச்சியை அளிக்கிறது என்றும், இங்கு முதலீடுகள் செய்ய அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

திறமைகளின் மையமாக இந்தியா விளங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு உலகில் நமது நாடு பல முன்னேற்றங்களை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா விளங்குவதால் முதலீடு செய்ய அழைப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, கலை, வணிகம், தொழில் அல்லது கல்வித்துறையாக இருந்தாலும் சரி. கண்டுபிடிப்புக்கான வாய்ப்பு, கூட்டாளருக்கான வாய்ப்பு, முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.