ஏழுமலையான் கோவிலில் குவியும் பக்தர்கள்...சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்த ஆன்லைன் தரிசன டிக்கெட்!

ஏழுமலையான் கோவிலில் குவியும் பக்தர்கள்...சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்த ஆன்லைன் தரிசன டிக்கெட்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். சென்னையில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி சென்று வருகின்றனர். மற்ற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சரிசனத்திற்கு குவிவதால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.