ஏழுமலையான் கோவிலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தமிழிசை செளந்தரராஜன், இன்று சுவாமி தரிசனம் செய்தார்.

ஏழுமலையான் கோவிலில்  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சுவாமி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், தமிழிசை செளந்தரராஜன், இன்று சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதமும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 100 கோடிக்கு மேல் தடுப்பு ஊசி செலுத்தி கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நாட்டு மக்கள் தற்போது ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாண்டிச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் என்ற முறையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.