புடவை விவகாரம்- சர்ச்சையில் சிக்கிய உணவகத்திற்கு சீல்

டெல்லியில் புடவை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்ததாக சர்ச்சையில் சிக்கிய உணவகம், உரிமம் இன்றி இயங்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புடவை விவகாரம்- சர்ச்சையில் சிக்கிய உணவகத்திற்கு சீல்

டெல்லியில் புடவை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுத்ததாக சர்ச்சையில் சிக்கிய உணவகம், உரிமம் இன்றி இயங்கியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெற்கு டெல்லி ஆண்ட்ரீவ்ஸ் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வந்த அகுயிலா உணவகத்திற்கு அண்மையில் சென்ற பெண், புடவை அணிந்ததாக கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பெண் விடுத்த குற்றச்சாட்டினை மறுத்த உணவகம், சம்பவம் தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டதாக கூறியிருந்தது.

இந்தநிலையில் அந்த உணவகத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியதில், உணவகம் சுகாதார உரிமம் இன்றி இயங்கியதும், பொது நிலத்தை ஆக்ரமித்து செயல்பட்டதும் கண்டிபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த உணவகத்தை மூட மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.