உயிருக்கு பயந்து ஓடிய டெல்லி மேயர்... பாஜக காரணமா?!!

உயிருக்கு பயந்து ஓடிய டெல்லி மேயர்... பாஜக காரணமா?!!

டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலின்போது, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பாஜக கவுன்சிலர்கள் தாக்கியதாக மேயர் ஷெல்லி ஓபராய் குற்றம் சாட்டியுள்ளார். 

நீண்ட இழுபறிக்குப்பின் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கவுன்சிலர் ஷெல்லி ஓபராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  தொடர்ந்து  6 நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது ஒருவரைஒருவர் தள்ளி விட்டும் அடித்தும் மோதியும் தகராறில் ஈடுபட்டதால் வரும் 27ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேர்தலின்போது உயிரை காப்பற்ற ஓடியே தப்பித்ததாகவும், தன்னைக் காப்பாற்றிய பெண் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி எனவும் ஷெல்லி ஓபராய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   தாறுமாறாக ஓடிய கார்.... தர்ம அடி கொடுத்த மக்கள்..!!