நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அமல்

நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அமல்

தலைநகர் டெல்லியில் நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வரவுள்ளது. 

டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து நாளை முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உடற்பயிற்சிக் கூடங்கள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் பூங்காக்களைத் திறக்கவும், கோல்ப் உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களைத் திறக்கவும், யோகா நிலையங்களை 50 சதவீத நபர்களுடன் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்களில் இருந்து டெல்லி வருவதற்கு இ பாஸ் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபான விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன்  நண்பகல்12 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.