மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் தொற்று... 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா...

மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் வேகமெடுக்கும் தொற்று... 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா...

இந்தியாவில் ஒமிக்ரான் வேகமெடுத்திருக்கும் நிலையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 454 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே 10 அமைச்சர்கள் மற்றும் 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என தெரிவித்தார். மகாராஷ்டிராவில் கொரோனா வேகமெடுத்திருக்கும் நிலையில் மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.