இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் பதிவான கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் பதிவான கொரோனா பாதிப்பு...!

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது.

உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 ஆயிரத்து 880 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க : கொரோனா ஒத்திகை...அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு...!

அதேசமயம், கொரோனாவால் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35 ஆயிரத்து 199 பேராக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொற்று தீவிரம் தொடர்பான ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற அவசர நிலை ஒத்திகையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.