6 மாதங்களுக்குப்பின் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு...பீதியில் மக்கள்!

6 மாதங்களுக்குப்பின் 4 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு...பீதியில் மக்கள்!

இந்தியாவில் சுமார் 6 மாதங்களுக்குப்பின் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக 3 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்த நிலையில், நேற்று 4 ஆயிரத்து 435 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின்...கீழடி அருங்காட்சியகம் கண்டு வியந்தேன் - அமைச்சர்!

கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 91ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 163 நாட்களுக்குப்பின், இந்தியாவில் ஒருநாள் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொதுசுகாதாரத்துறை அறிவித்துள்ளது.