நாட்டில் முதன்முதலாக கொரோனா பாதித்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா!

இந்தியாவில் முதல் நபராக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி, மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் முதன்முதலாக கொரோனா பாதித்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா!

இந்தியாவில் முதல் நபராக கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி, மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வூஹான் மாநிலத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி, செமஸ்டர் விடுமுறைக்காக கேரள மாநிலம் திருச்சூர் திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபராக கண்டறியப்பட்டார். பின்னர் மூன்று வார மருத்துவ சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,  தற்போது அந்த மாணவி படிப்பு தொடர்பாக டெல்லிக்கு செல்ல தயாராகியுள்ளார்.

இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.