எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்... வெங்கையா நாயுடு வேண்டுகோள்...

மாநிலங்களவை கூட்டத்தொடரை முழுமையாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்... வெங்கையா நாயுடு வேண்டுகோள்...

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில், அவரது இல்லத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி குழு தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநிலங்களவை குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநிலங்களவை குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு எதிர்க்கட்சிகளும் தங்களுடைய நிலைப்பாடு மற்றும், அவையில் எழுப்பவேண்டிய விவாதங்கள் தொடர்பாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உடன் ஆலோசனை நடத்தினர். திமுக தரப்பில் கலந்துகொண்ட மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்குவது தொடர்பான விவாதங்கள் நடைபெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.