நம்பிக்கையை இழக்கும்போது பதவி விலகத்தான் வேண்டும்.. காங்கிரஸ்  மூத்த தலைவர் கருத்து...

எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை முதலமைச்சர் இழக்கும்போது, அவர் பதவியில் இருந்து விலகத்தான் வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கூறியுள்ளார். 

நம்பிக்கையை இழக்கும்போது பதவி விலகத்தான் வேண்டும்.. காங்கிரஸ்  மூத்த தலைவர் கருத்து...

பஞ்சாப் மாநில முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங் ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் கட்சியின் மேலிடத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த  தலைவர்களில் ஒருவரான ரன்தீப் சுர்ஜிவாலா, எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை முதலமைச்சர் இழக்கும்போது, அவர் பதவியில் இருந்து விலகத்தான் வேண்டும் என தெரிவித்தார்.

79 எம்.எல்.ஏ.க்களில் 78 பேர் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என கடிதம் எழுதியதாகவும், முதலமைச்சரை தாங்கள் மாற்றவில்லை என்றால் சர்வாதிகார போக்கு என கருதப்படும் எனவும், ரன்தீப் சுர்ஜிவாலா குறிப்பிட்டுள்ளார்.