செய்தியாளர் சந்திப்பில் கதறி கதறி அழுத சந்திரபாபு நாயுடு!!..

அமராவதியில் உள்ள சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கதறி அழுத காட்சி தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

செய்தியாளர் சந்திப்பில் கதறி  கதறி அழுத சந்திரபாபு நாயுடு!!..

ஆந்திராவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நேன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது நாளான இன்று சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடைய குடும்பத்தினரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தரைக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த சந்திரபாபு நாயுடு, கௌரவம் இல்லாத இந்த சட்ட சபைக்கு இனி மேல் நான் முதலமைச்சரானால் தான் வருவேன் என்று கூறி சட்டமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறினார். பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, பேச முடியாமல் அவர் கதறி அழுதார்.