அதானி விவகாரம் குறித்து பதிலளிக்க மத்திய அரசு மறுப்பு...திருச்சி சிவா குற்றச்சாட்டு!

அதானி விவகாரம் குறித்து பதிலளிக்க மத்திய அரசு மறுப்பு...திருச்சி சிவா குற்றச்சாட்டு!

அதானி குழும விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் அனுமதி மறுப்பதாக திருச்சி சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் அதானி குழும முறைகேடு குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இதையும் படிக்க : வரும் பிப்ரவரி 17... நேருக்கு நேர் மோதும் தனுஷ் - செல்வராகவன்...!

இந்நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை ஒத்திவைத்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருச்சி சிவா, அதானி குழும முறைகேடு குறித்த தங்களின் கோரிக்கையை மத்திய அரசு மதிக்கவில்லை எனவும், நாடாளுமன்றத்தில் தங்களது குரல் வலை நசுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதானி குழும முறைகேடு ஏழை மக்கள் வாழும் நாட்டில் மிகவும் வீரியமான ஒன்று எனவும், அதன் மீது உரிய விசாரணை நடத்த வலியுறுத்துவதாகவும் திருச்சி சிவா கூறினார்.