பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

பஞ்சாப் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்ற பிரதமர் மோடியின் வாகனத்தை போராட்டக்காரர்கள் வழிமறித்ததால் பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் மன்விந்தர்சிங் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு கடந்த சனிக்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

பிரதமர் மோடியின் பயண தரவுகளை பத்திரமாக பாதுகாக்கும் படி பஞ்சாப் மற்றும் அரியானா பதிவாளர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.