எச்சிலை துப்பி சப்பாத்தி சுடும் ஓட்டல் ஊழியர் - இணையத்தில் வீடியோ வைரல்
ஓட்டல் ஒன்றில் ஊழியர் ஒருவர் சப்பாத்தியை மாவை திரட்டி அதில் எச்சிலை துப்பி சுட்டெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டல் ஒன்றில் ஊழியர் ஒருவர் சப்பாத்தியை மாவை திரட்டி அதில் எச்சிலை துப்பி சுட்டெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அந்நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் லோனி என்னும் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தான் இப்படியோடு அநாகரீக சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஓட்டல் ஊழியர் சப்பாத்தி மாவை நன்றாக திரட்டி அதில் எச்சிலை துப்பி பின் தந்தூரி அடுப்பில் சுட்டெடுக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஓட்டலை அடையாளம் கண்டு, இப்படியொரு அநாகரீக செயலில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
रोटी बनाते समय फिर थूकने का #Video
— Kreately.in (@KreatelyMedia) November 15, 2021
गाजियाबाद: लोनी के बंथला फ्लाईओवर के पास स्थित होटल पर रोटी बनाते समय रोटी पर थूकते हुए #Video सोशल मीडिया पर वायरल, इसकी शिकायत हिंदू रक्षा दल के लोगों ने थाना लोनी में दी है..
पुलिस ने आरोपी को हिरासत में ले लिया है pic.twitter.com/ONoCqK1c8X