கோயிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடிய பெண் மீது வழக்குப்பதிவு

மத்தியபிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் கோயிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோயிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடிய பெண் மீது வழக்குப்பதிவு

மத்தியபிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் கோயிலுக்குள் சினிமா பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அங்குள்ள பிரபல மகாகாளிஸ்வர் கோயிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்ற மனீஷா ரோஷன் என்ற இளம்பெண், கோயிலுக்குள் பாலிவுட் சினிமா பாடலுக்கு நடனமாடி, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, தமது செயலுக்கு மனீஷா மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில், விதிகளை மீறி கோயிலுக்குள் நடனமாடி, அதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதாக, மனீஷா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் உள்ளனர்.

#Ujjain के महाकालेश्वर मंदिर में रील बनाने का एक वीडियो सामने आया है, इस वीडियो में एक महिला मंदिर परिसर में फिल्मी गीतों पर थिरक रही है, वीडियो सामने आने के बाद मंदिर के पुजारी ने इस पर आपत्ति जताई है pic.twitter.com/BTPzCjEU91

— Hindustan (@Live_Hindustan) October 10, 2021 ">