பிரதமர் மோடி வடிவத்தில் உண்டியல் செய்து விற்பனை
உத்தரப்பிரதேச மாநிலம் முஷாபர்பூரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் என்பவர் பிரதமர் மோடி வடிவத்தில் உண்டியல் தயாரித்து விற்று வருகிறார். அந்த உண்டியலில் உலகிலேயே தலை சிறந்த பிரதமர் என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் முஷாபர்பூரைச் சேர்ந்த ஜெய் பிரகாஷ் என்பவர் பிரதமர் மோடி வடிவத்தில் உண்டியல் தயாரித்து விற்று வருகிறார். அந்த உண்டியலில் உலகிலேயே தலை சிறந்த பிரதமர் என்ற வாசகத்தை எழுதியுள்ளார்.
சிற்பம் செதுக்கும் வேலை செய்துவந்த ஜெய்பிரகாஷ், கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த போது, புதுமையாக சிந்தித்து அவர், மோடி உருவத்தில் உண்டியல் செதுக்கியுள்ளார். பிரதமர் மோடி நாட்டைப் பாதுகாக்க முயன்று வரும் வேளையில் அவரைப் பின்பற்றி பணத்தை பாதுகாப்பதற்காக இந்த உண்டியலை வடிவமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பொம்மையை உருவாக்க தனக்கு ஒருமாதம் வரை ஆனதாகத் தெரிவித்த அவர், இதில் ஒரு லட்ச ரூபாய் வரை பணத்தை சேமிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.