கொரோனாவிலிருந்து மீண்ட சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு!!

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட 13 வயது சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்ட சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு!!

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட 13 வயது சிறுவனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு ஏற்படும் பிந்தைய பாதிப்புகள் கவலையளிக்ககூடியதாக இருக்கிறது. உடல் மற்றும் மன நலன்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இணைநோய் கொண்டவர்களுக்கு கரும்பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் டேவனகேரே மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் தற்போது மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வரும் குழந்தைகளில் மல்டிசிஸ்டம் அழற்சி நோயின் அறிகுறிகள் மட்டுமே இதுவரை கொரோனா பிந்தைய பாதிப்புகளாக இருந்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாக மூளையில் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.