இந்தியா கூட்டணி குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு ...!

இந்தியா கூட்டணி  குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு ...!

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் இந்தியா கூட்டணியின் 21 எதிர்கட்சி எம்.பிக்கள் நாளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மணிப்பூரின் இம்பாலில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த 17, 18ம் தேதிகளில் இந்தியா எதிர்கட்சிகளின் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்தனர். காங்கிரசின் ஆதிர் ரஞ்சன், திமுகவின் கனிமொழி, விசிகவின் திருமாவளவன் உள்ளிட்டோர் மாநில ஆளுநரையும் சந்தித்தனர்.

இந்நிலையில் மணிப்பூர் சென்று திரும்பிய 21 எம்.பிக்கள் நாளை காலை 11.30 மணிக்கு குடியரசுத்தலைவரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது மணிப்பூர் மற்றும் ஹரியானா விவகாரம், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   | உச்சநீதிமன்ற நீதிபதியை அவமதித்த வழக்கு: பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனையுடன் ஜாமீன்