பிரதமரின் ஆலோசகராக அமித் கரே நியமனம்...!!

பிரதமரின் ஆலோசகராக அமித் கரே நியமனம்...!!

பிரதமர் மோடியின் ஆலோசகராக, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை முன்னாள் செயலாளர் அமித் கரே நியமிக்கப்பட்டுள்ளார்.

1985 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், உயர் கல்வித்துறை செயலராக இருந்து ஓய்வுப்பெற்றவர். தனது பணிக்காலத்தில் தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்தது மட்டுமல்லாது, தகவல் தொழில்நுட்ப துறையிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார்.

இந்தநிலையில் அமித் கரேவை பிரதமரின் ஆலோசகராக பணி நியமனம் செய்து, அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அவர் அப்பொறுப்பில்நீடிப்பார் என கூறப்பட்டுள்ளது.