ஏர் இந்தியா ஒப்பந்தம்; இந்தியாவிற்கு ஜோ பைடன் வாழ்த்து

ஏர் இந்தியா ஒப்பந்தம்; இந்தியாவிற்கு ஜோ பைடன் வாழ்த்து

3 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் 220 புதிய போயிங் பிஏஎன் விமானங்களை வாங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டாடா வசம் சென்ற ஏர் இந்தியா நிறுவனம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'ஏர் பஸ்' (AirBus) என்ற விமானக் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து புதிதாக 220 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவதற்காகவும், சர்வதேச அளவிலான விமானப் போக்குவரத்தில் பிரத்யேக இடம் பிடிப்பதற்காகவும் இந்த நடவடிக்கையில் ஏர் இந்தியா நிறுவனம் இறங்கியுள்ளது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டு தெரிவித்துள்ளனர்.