வைரலாகும் காங்கிரஸில் உட்கட்சி பூசல் விளம்பரம்...விளக்கமளித்த அசோக் கெலாட்...!

வைரலாகும் காங்கிரஸில் உட்கட்சி பூசல் விளம்பரம்...விளக்கமளித்த அசோக் கெலாட்...!

காங்கிரஸில் உட்கட்சி பூசல் என விளம்பரப்படுத்தப்படுவதாகவும், ஆனால் தங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் ரீகர் சமுகத்தினருடனான நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் என விளம்பரப்படுத்தப்படுவதாகவும், ஆனால் தங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை என குறிப்பிட்டு உரையாற்றிய அசோக் கெலாட், வாக்குகளை ஈர்க்கும் திறன் காந்தி குடும்பத்துக்கு இல்லை என பாஜக விமர்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மீண்டும் ஒரு நேதாஜியா சசி தரூர்!!!கட்சியால் ஓரங்கட்டப்படும் காரணமென்ன!!!

ஆனால் உண்மையில் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் மீது மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ள அவர், அவர்கள் எங்கு சென்றாலும், லட்சக்கணக்கான மக்கள் பெருங்கூட்டமாக திரள்வதாகவும் தெரிவித்துள்ளார்.