இரு அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளி!!

இரு அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் அமளி!!

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து, 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், மக்களவையிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.