சோதனைக்கு பயந்து ஆடைகளை அகற்றிய நபர்...! குடிபோதையில் அரங்கேற்றிய சம்பவம்...!

சோதனைக்கு பயந்து ஆடைகளை அகற்றிய நபர்...! குடிபோதையில் அரங்கேற்றிய சம்பவம்...!

ஹைதராபாத்தில் மாலக்பேட்- தில்சுக் நகர் சாலையில், போலீசாரின்  சோதனையில் இருந்து தப்பிக்க முயன்றபோது, ஒருவர் தனது ஆடைகளை அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியின் மலக்பேட் - தில்சுக்நகர் சாலையில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது, ஒருவர் குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்ததுள்ளார். குடிபோதையில் வாகனத்தை இயக்கி வந்தது தெரிந்துவிடும் என்பதால், அந்த நபர் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றுள்ளார். பின்னர் அவரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார். இதனால் அவருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிது நேரத்திற்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் தனது ஆடைகளை அகற்றி, போலீசாரிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். 

தொடர்ந்து அந்த நபர், போலீசார் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும்  குற்றம் சாட்டினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் பெரும் வாக்குவாதத்திற்கு பிறகு, அந்த நபர் தனது ஆடைகளை அணிந்துள்ளார். மேலும் போலீசார், அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரை ஒப்பநடைத்தனர். தொடர்ந்து அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவும்  செய்யப்பட்டுள்ளது.