உடல் முழுவதும் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

கர்நாடகாவில் உடல் முழுவதும் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உடல் முழுவதும் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் ஹல்யால் என்ற கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில், சிறுமி உடலில் தீ காயங்களுடன் துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்ட தீக்காயங்கள் போன்று காணப்பட்டது. இதனை பார்த்த விவசாயி உடனடியாக பாலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைகாக பெலகாவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமி மருத்துமனையில் 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி யார், அவருடைய பெற்றோர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் சிறுமியின் உடல் முழுவதும் பாதாம் எண்ணெய் மற்றும் கற்பூரம் துகள்கள் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுமியை வைத்து மர்ம நபர்கள் செய்வினை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.