லிப்டில் மாட்டிக் கொண்ட 10 வயது சிறுவன்... பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

45 நிமிடங்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட 10 வயது சிறுவன் மூச்சு திணறல் ஏற்பட்டதும் தன் ஆடைகளை கழற்ற முயற்சி செய்யும் சிசிடிவி காட்சி வெளியிடு.

லிப்டில் மாட்டிக் கொண்ட 10 வயது சிறுவன்... பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு...

டெல்லி அருகே உள்ள காஜியாபாத், ராஜ்நகர் விரிவாக்கத்தில் உள்ள கே.டபிள்யூ சிருஷ்டி சொசைட்டியில் அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. எதிரே உள்ள தன் வீட்டில் இருந்து ஜி பிரிவில் வசிக்கும் தன்னுடைய நண்பரை சந்திக்க சென்ற 10 வயதான பரத்வாஜ், ஜி டவரில் உள்ள லிப்டில் ஏறியுள்ளான். 12வது மாடியை அடைந்தவுடன் லிப்ட் நின்றுவிட்டது.

கதவும் திறக்காத காரணத்தினால் நீண்ட நேரமாக கதவை திறக்க முயற்சி செய்வதும் ஒரு கட்டத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டதால் தன்னுடைய ஆடைகளை கழற்ற முயற்சி செய்யும் காட்சிகள் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.

45 நிமிடங்களுக்கு பிறகு லிப்ட் அருகே வந்த ஒருவர் குழந்தையின் சத்தம் கேட்பதாக கூறியதை அடுத்து லிப்ட் உடைக்கப்பட்டு குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் அடுக்குமாடி குடியிறுப்பை பராமரிக்கும் நிர்வாகிகள் மீது நந்தகிராம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.