காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி!

காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு அரசுப் பணி!

ஜம்மு காஷ்மீரில் 3 ஆயிரம் பேருக்கு அரசுப்பணிக்கான நியமன ஆணைகள் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 1 லட்சம் பேருக்கு பணி வழங்கும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக 3 ஆயிரம் பேருக்கு பணியானை வழங்கும் நிகழ்வை காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீரில் தொடங்கி வைத்தார். 

21ம் நூற்றாண்டில் நடப்பு பத்தாண்டு காலம், ஜம்மு காஷ்மீரின் முக்கியமான தசாப்தம் என அவர் குறிப்பிட்டார். மாநில வளர்ச்சிக்காக இளைஞர்கள் அதிகளவில் முன்வருவதாகவும் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை எனவும் அவர் கூறினார். வேலைவாய்ப்புத் திருவிழா திட்டத்தின் மூலம் சில மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்கள் மத்திய அரசால் இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.