கேரளாவில் பரபரப்பு...திடீரென சொகுசு படகு கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு...பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

கேரளாவில் பரபரப்பு...திடீரென சொகுசு படகு கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு...பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!

கேரளா மாநிலம், மலப்புரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகி உள்ளதாக, கதவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், 20 க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இதையும் படிக்க : உட்கட்சி பதவிப் போட்டியால் தமிழ்நாடு சீரழிவை சந்தித்தது...முதலமைச்சர் குற்றச்சாட்டு!

ஒருபுறம் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வந்தாலும், மறுபுறம் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கேரள அரசு அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.