18 நாடு மக்கள்.. 23 ஆயிரம் இந்தியர்கள்.. உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம்.. பிரதமர் மோடி பெருமிதம்!!

உக்ரைனில் இருந்து 23 ஆயிரம் இந்தியர்களை மீட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமைபட தெரிவித்துள்ளார். 

18 நாடு மக்கள்.. 23 ஆயிரம் இந்தியர்கள்.. உக்ரைனில் இருந்து மீட்டுள்ளோம்.. பிரதமர் மோடி பெருமிதம்!!

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.  

அப்போது பேசிய அவர், உக்ரைனில் இருந்து சுமார் 23 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய சூழ்நிலைகளில் இந்த மீட்பு நடவடிக்கையை நடத்துவது மிகவும் சவாலானது என்றும் குறிப்பிட்டார்.  

உக்ரைனில் இருந்து 18 நாடுகளை சேர்ந்தவர்களையும் நாம் பத்திரமாக வெளியேற்றியுள்ளதாகவும் பெருமைபட கூறிய பிரதமர் மோடி,  உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு 90 டன் நிவாரண பொருள் உதவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அரசு அதிக முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, எந்தவொரு சர்வதேச நெருக்கடியின் போதும் தனது குடிமக்களுக்கு உதவ இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டுள்ளதை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி,  ஆபரேஷன் கங்கா நடவடிக்கையில் குழுவாக ஈடுபட்டுள்ள அனைவரும் வெளிப்படுத்திய தேசபக்தி உணர்வு, சமூக சேவை உணர்வு ஆகியவற்றை பாராட்டினார்.