இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு... ஒமிக்ரான் பரவலை தடுக்க மகாராஷ்டிராவில் அதிரடி நடவடிக்கை...

ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு... ஒமிக்ரான் பரவலை தடுக்க மகாராஷ்டிராவில் அதிரடி நடவடிக்கை...

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது அந்த வைரஸ் உலகில் உள்ள மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து நோய் இந்தியாவில் பரவுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாட்டு பயணிகள் மூலமாக இந்தியாவிற்குள் அந்த வைரஸ் நுழைந்து உள்ளது. தற்போது நாட்டில் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இதுவரை 13 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மும்பையில் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வரும் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று அதிகாலை முதல் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். இதன்படி அடுத்த 14 நாட்களுக்கு நகரில் பேரணி, பொது கூட்டம், போராட்டம் எதையும் நடத்த முடியாது. இதேபோல பெரிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படாது.