சைலண்டாக சாதித்த தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி…  

மாநிலங்களவையில் நடைபெற்ற கடைசி 7 கூட்டத்தில் 100 சதவீதம் பங்கேற்ற ஒரே எம்.பி. என்ற பெருமையை, தமிழகத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் பெற்றுள்ளார்.

சைலண்டாக சாதித்த தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி…   

மாநிலங்களவையில் நடைபெற்ற கடைசி 7 கூட்டத்தில் 100 சதவீதம் பங்கேற்ற ஒரே எம்.பி. என்ற பெருமையை, தமிழகத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் பெற்றுள்ளார்.

பெரும்பாலான நாட்களில் மாநிலங்களவை எப்பொழுதும் 100 சதவீத உறுப்பினர்களுடன் நடைபெற்றது கிடையாது. பெரும்பாலான எம்.பி.க்கள், அவைகளில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் நடைபெற்ற கடைசி 7 கூட்டத்தில் அனைத்து நாட்களும் ஒரேயொரு எம்.பி. கலந்து கொண்டுள்ளார். அவர் தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் ஆவார். 75 வயதான இவர், 138 வேலை நாட்களில் ஒருநாள் கூட கூட்டத்தை தவற விட்டது கிடையாது.