மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை... புதிய யூனியன் பிரதேசத்தில் பரபரப்பு...

அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் ஒரு  பயங்கரவாதி சுட்டுக் கொலை... புதிய யூனியன் பிரதேசத்தில் பரபரப்பு...

ஜம்மு-காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் என்ற இடத்தில் உள்ள டாங்பாவா கிராமத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இன்று காலை இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

டாங்பாவாவில் நேற்றிரவு, ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அப்பகுதியில் மேலும் ஒரு தீவிரவாதி பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த தீவிரவாதியும் தற்போது பாதுகாப்பு படையினரால் தேடிக் கண்டுபிடித்து கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு முதல் அதிரடியான என்கவுன்டரில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உலவியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்