பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு... விவசாயிகள் மகிழ்ச்சி!

பீட்ரூட் கொள்முதல் விலை உயர்வு... விவசாயிகள் மகிழ்ச்சி!

கோத்தகிரி மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் பீட்ரூட் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பூண்டு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் பீட்ரூட் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் பீட்ரூட் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இதையும் படிக்க || "கூலிப்படையினரின் கூடாரமாக மாறிவருகிறது செங்கல்பட்டு" அன்புமணி ராமதாஸ்!