சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய இளைஞர் கைது 

பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி-க்கு  வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் என்பவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய இளைஞர் கைது 

வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபரால் ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கூடுதலாக பிரபலமடைந்தார். 

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து, ஆதாரங்களையும் வழங்கினார்.  

இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சனம் ஷெட்டி-க்கு  வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியது திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் என்பவர் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கல்லூரி மாணவன் ராய்யை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.