படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..இணையத்தில் குமுறும் யாஷிகா ஆனந்த்!

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..இணையத்தில் குமுறும் யாஷிகா ஆனந்த்!

கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி அன்று இரவு காரில் தனது தோழி பவானியுடனும் மற்றும் 2 நண்பர்களுடனும் சென்று கொண்டிருந்த நடிகை யாஷிகாவுக்கு திடீரென்று எதிர்பாராத விபத்து நடைபெற்றது. அந்த விபத்தில் நடிகை யாஷிகாவின் தோழி பவானி இறந்துவிட்டனர். அதன்பின் நடிகை யாஷிகா, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

இப்படி ஒரு நிலையிலும், யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கடமையை செய்’ என்னும் தான் நடித்து வெளிவரவிருக்கும் படத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். யாஷிகாவின் பலவருட கஷ்டத்தின் பலனாகவே தனக்கு ‘கடமையை செய்’ என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறுகிறார்.

அந்த திரைப்படத்தில் S.J.சூர்யா, மொட்டராஜேந்திரன், ராஜசிம்மன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன் ஆகியோர் நடித்துள்ளார்கள். ஒரு பக்கம் வாழ்க்கை உணர்ச்சி அற்றதாகவும், கஷ்டமாகவும் மறுபுறம், வாழ்க்கை சென்று கொண்டிருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.

ஆனால் யாஷிகாவின் ரசிகர்கள் ‘கவலைப்படாதீர்கள், இதுவும் கடந்து போகும், நடந்ததை மாற்ற முடியாது, தங்களின் மறு வரவேற்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ என்று யாஷிகாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர்.