தயாரிப்பாளர்களை மிரட்டும் த்ரிஷாவின் தாயார்..! திமிரு பிடித்தவர் த்ரிஷா..!தயாரிப்பாளரின் ஸ்டேட்மெண்டால் கோலிவுட் அதிர்ச்சி...!

20 வருடங்களாகியும் நடிப்பை கற்றுக் கொள்ளவில்லை..!

தயாரிப்பாளர்களை மிரட்டும் த்ரிஷாவின் தாயார்..! திமிரு பிடித்தவர் த்ரிஷா..!தயாரிப்பாளரின் ஸ்டேட்மெண்டால் கோலிவுட் அதிர்ச்சி...!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களாக ஹீரோயின்களாக வலம் வருபவர்கள் என்றால் இரண்டே பேர் தான் ஒன்று நயன்தாரா மற்றொருவர் த்ரிஷா.  1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சினிமாவில் கவனத்தை செலுத்த தொடங்கினார் த்ரிஷா. சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி திரைப்படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்தவர் அதனை தொடர்ந்து சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அவரது எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர், இன்று வரை அவரது கட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார். 

என்றுமே ஏறாத மெல்லிய உடம்பு, எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அப்படியே ஊறிபோகும் எதார்த்த நடிப்பு என தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக இளைஞர்களின் கனவு கன்னியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார், கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், விஜய்சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார், நடித்துக் கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் ஓடிடியில் வெளியான பரமபத விளையாட்டு எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட குறும்படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது கைவசம் பொன்னியின் செல்வன் பார்ட் 1, பொன்னியின் செல்வன் பார்ட் 2, கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2, ஆகிய படங்களை வைத்துள்ளார். 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ராஜன் த்ரிஷாவை பற்றி எக்கு தப்பாக கூறியது தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளரான கே.ராஜன், நடிகை த்ரிஷா தான் நடித்த திரைப்பட விளம்பரங்களுக்கு வருகை தருவதில்லை, இதனால் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என விளாசினார்.மேலும் நடிகை த்ரிஷா மிகவும் திமிர் பிடித்தவர். இத்தனை வருஷம் ஆகியும் த்ரிஷா தனது நடிப்புத் திறனை எந்த வகையிலும் வளர்த்துக்கொள்ளவில்லை. அனால் அவரின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே இருக்கிறது. அவர் நடித்த திரைப்படங்களின் விளம்பரத்துக்கு வருமாறு தயாரிப்பாளர் சங்கம் வாயிலாக அழைப்பு விடுத்தால், திரிஷாவின் தாயார் எங்களை மிரட்டுகிறார் என்கிறார்.

எங்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று அடாவடியாக பதில் சொல்கிறார் த்ரிஷாவின் தாயார். சில நேரங்களில் நடிகை திரிஷா ஒப்புக் கொண்டாலும் அவரின் குடும்பத்தார் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள். என அவர் கூறியிருப்பது த்ரிஷாவின் ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் வட்டாரங்களையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. த்ரிஷா மட்டுமின்றி இன்று முன்னணி நடிகர், நடிகைகள் கூட அவர்களது படத்தின் புரோமஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். கே.ராஜன் ஓப்பனாக சொல்லிவிட்டார் பலர் சொல்வதற்கு தயங்கி வருகின்றனர் என்கிறது கோடம்பாக்கம்..