அடுத்தாண்டு ரிலிசாகும் கே.ஜி.எஃப்-2..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போன கே.ஜி.எஃப்-2..!

அடுத்தாண்டு ரிலிசாகும் கே.ஜி.எஃப்-2..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எப். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ், ஸ்ரீநிதி ரெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் முகங்கள் பெரிதாக படத்தில் இல்லை என்றாலும் கூட கதை களத்திற்காகவும், மியூஸிக்-கிற்காகவும் மிகப்பெரிய வரவேற்பை தமிழில் பெற்றது கே.ஜி.எஃப்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், கொரோனா ஊரடங்கிற்கு மத்தியிலும் அவ்வப்போது அரசின் அனுமதியுடன் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டது. இரண்டாம் பாகத்தையும் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். 

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி இப்படச்ம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.