தெறிக்க விடும் 'D50' அப்டேட்... மீண்டும் இயக்குநராகும் நடிகர் தனுஷ்!!

தெறிக்க விடும் 'D50' அப்டேட்...  மீண்டும் இயக்குநராகும் நடிகர் தனுஷ்!!

ரசிகர்களின் மத்தியில் தனுஷ் நடிப்பில் உருவாகும் அருண் மாதேஸ்வரனின் 'கேப்டன் மில்லர்' படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வேளையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகின்ற தீபாவளியை முன்னிட்டு , 'கேப்டன் மில்லர்' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, சன் பிக்ச்சர்ஸ், நடிகர் தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி, நேற்று, 'D50' என தற்போதைக்கு பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார், நடிகர் தனுஷ். முன்பு கூறியபடியே சன் பிக்ச்சர்ஸ், இந்த படத்தை தயாரிக்கின்றது. இந்த அறிவிப்பில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை தெறிக்கவிடும் வகையில், இந்த படத்தின் கதையை நடிகர் தனுஷே எழுதி, அவரே இயக்கவும் உள்ளார்.

மேலும், இந்த படத்தில், துஷரா விஜயன், எஸ் ஜே சூர்யா மற்றும் சுதிப் ஜிஷன் போன்றோறும் நடிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் வெளியிட்ட இந்த போஸ்டரில், தலையில் மொட்டை அடித்தது போல், நின்றுகொண்டிருப்பார். சமீபத்தில், திருப்பதியில், தனுஷ் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க: "வழக்கு தொடர்பாக விளக்கம் தர வாய்ப்பு வழங்கவில்லை", நடிகர் தனுஷ் தரப்பு வாதம்!