விஷாலின் 31-வது படத்தின் டைட்டில் வெளியீடு..! ஆக்‌ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு ..!

ஆக்ரோஷமாக மாஸாக போஸ் கொடுக்கும் நடிகர் விஷால்..!

விஷாலின் 31-வது படத்தின் டைட்டில் வெளியீடு..! ஆக்‌ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு ..!

நடிகர் விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கியுள்ளார். விஷாலின் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஃபைட் சீனின் போது விஷாலுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். 

இந்த நிலையில், இன்று விஷால் தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனையொட்டி, படக்குழுவினர் அவரது 31-வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. வீரமே வாகை சூடும் என இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் ஆக்ரோஷமாக கையில் கட்டையுடன் மாஸாக போஸ் கொடுத்துள்ளார். நிச்சயம் இந்தப் படமும் ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.