’ ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது..? அப்டேட் கொடுத்த படக்குழு..!

’ ஜவான்’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  எப்போது..?   அப்டேட் கொடுத்த படக்குழு..!

ஜவான் திரப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இன்னிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெருகிறது. அஹ்டில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர். அந்த வகையில், இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை பிரியாமணி மேடையில் பேசுகையில்:- 

” இனிமேல் இங்குதான் இருப்பேன். இதுபோன்ற ஒரு மேடைக்கு வந்ததில் மகிழ்ச்சி.  இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம் அட்லி. ஜூம் காலில் எனக்கு கதை சொன்னார். ரொம்ப பிடித்திருந்தது உடனே ஓகே சொல்லிவிட்டேன். விஜய் சேதுபதி பெரிய ரசிகை நான். உங்களுடன் அதிகம் நடிக்கவில்லை. நீங்கள் இருப்பதால் இப்படம் வேறு தளத்திற்கு சென்றுவிட்டது. அனிருத் இசை பிடிக்கும். இவரது இசையில் நடனம் ஆட ஆசை இருந்தது. இப்படத்தில் அது நிறைவேறிவிட்டது. ( அனிருத் இசையில் அடுத்து லியோ வருகிறது என்று பேசும் போது ரசிகர்கள் ஆரவாரம்) பத்து வருடங்களுக்கு முன்பு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடலுக்கு ஆடினேன். அதன்பின் இந்த படத்தில் உங்களுடன் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை”,  என்றார்.

தொடர்ந்து இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மேடையில் பேசுகையில்:-

” எனது இசை கலைஞர்களுக்கு நன்றி. இதில் மொத்தம் 500 இசை கலைஞர்கள் நன்றி சொல்லிக் கொள்கிறேன். விவேக் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். மற்ற டப்பிங் படங்கள் பாடல்கள் டப்பிங் பாட்டு போல இருக்கும். இதில் அப்படி இல்லை. இங்கிருந்து போனவர்கள் ரீமேக் படம் தான் செய்துள்ளனர். அட்லி சொந்த படம் எடுத்துள்ளார். 10 வருடமாக தமிழ் சினிமாவில் இருந்து என்னை மும்பையில் நிற்க வைத்துள்ளார்.  நன்றி ப்ரோ. போன இடம் உங்க காடு அட்லி.  எல்லோரும் ஒதுங்கி தான் விளையாட வேண்டும். இந்த இடம் கிடைத்தது பெரிய பாக்கியம். முதல் இந்தி படமே ஷாருக்கான் உடன் ஆண்டவன் பாக்கியம். உங்களை ரொம்ப மிஸ் செய்வேன். லவ் யூ ஷாரூக்.  லண்டனில் போய் எனக்கு சட்டை வாங்கி வந்தார். அவ்வளவு காதல் என் மீது வைத்துள்ளார். இது இந்தி படம் அல்ல. இந்தியன் படம். தமிழிலும் பயங்கரமாக அடிக்கப் போகிறது. நன்றி!. உங்களது எனர்ஜிக்கு நன்றி அனைவரையும் திரையரங்குகளில் பார்க்கலாம் .( லியோ லியோ என்று ரசிகர்கள் கத்தினர். அது அடுத்த மேடை என்று அனிருத் தெரிவித்தார்). தொடர்ந்து பேசுகையில், இந்தி படம் பண்ண வேண்டும் என்ற திட்டம் இல்லை . அட்லி தான் காரணம். இனி அட்லி தனியாக போகாமல் எங்கள் எல்லோரையும் கூட்டிட்டு போய்‌அவர் ஜாலியாக சிரித்துக்கொண்டு இருப்பார். அததுதான் அவரது சிறப்பு. இன்னும் 4 பாடல்கள் இருக்கிறது. ஒவ்வொன்றாக வெளியாகும்”, என்று கூறினார்.

இந்நிலையில், ஜவான் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 30 -ஆம் தேதி சென்னை, சாய்ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்க   | “தங்க வைர ஆபரணங்கள் மண்ணுக்குள் புதைப்பு; சீமான்மீது வருமான வரித்துறை சோதனை நடத்த வேண்டும்” - நடிகை விஜயலெட்சுமி.